Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் சிபாரிசு தரிசனத்திற்கு ... கோவை கோதண்டராமசுவாமி கோயிலில் திருப்பாவை உபன்யாசம் கோவை கோதண்டராமசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

17 டிச
2022
09:12

உடன்குடி: தேரிக்குடியிருப்பு, கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சியில், ஏராளமானர்கள் கலந்து கொண்டு , போட்டி போட்டு புனித மண் எடுத்துச் சென்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், தேரிக்குடியிருப்பு, குதிரைமொழி தேரியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா, கடந்த நவ., 17ம் தேதி துவங்கி, தினசரி சிறப்பு பூஜையும், வில்லிசையும் நடந்தது.

முக்கிய நிகழ்ச்சிகள், கடந்த 14ம் தேதி காலை ஐவர்ராஜா, மாலை அம்மன் பூஜையும், மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு மாக்காப்பு தீபராதனை நடந்தது. 15ம் தேதி காலை 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12:00 மணிக்கு சிறப்பு விசேஷ அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 7:00 மணிக்கு புஷ்பாஞ்சலியும், தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 9:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலாவும், கோயில் கலையரங்கத்தில் இரவு 10:00 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது . நேற்று காலை 6:00 மணிக்கு 108 பால்குட ஊர்வலம், காலை 9:00 மணிக்கு கற்குவேல் அய்யனார், சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மிரபரணி தீர்த்தம் எடுத்து மேளதாளத்துடன் வருதல், 10:00 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நண்பகல் 12 : 00 மணிக்கு அபிஷேக மற்றும் தீபாராதனையும், மாலை 4:00 மணிக்கு பிரசித்திப்பெற்ற கள்ளர் வெட்டு நிகழ்ச்சிக்கு சுவாமிகள் புறப்படுதல், மாலை 4:30 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மண் ஏரியில், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடந்தது. பின்னர், கள்ளர் என்னும் இளநீர் வெட்டிய இடத்தில், மக்கள் போட்டி போட்டு புனித மணல் எடுத்து சென்றனர். இந்த மணலை பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். மேலும் விவசாய நிலங்கள், நல்ல செயல்கள் நடக்கும் போதும் இந்த மணலை பயன்படுத்துவார்கள். இதில் துணை ஆணையர் வெங்கடேஷ், துாத்துக்குடி மாவட்ட பா. ஜ . , பொதுச் செயலாளர் சிவமுருகன் ஆதித்தன்கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ர்கள், புனித மணல் எடுத்துச் சென்றனர். ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர்,கோயில் அஜித், செயல் அலுவலர் காந்திமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10:00 – 10:30 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,10)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar