பதிவு செய்த நாள்
17
டிச
2022
09:12
உடன்குடி: தேரிக்குடியிருப்பு, கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சியில், ஏராளமானர்கள் கலந்து கொண்டு , போட்டி போட்டு புனித மண் எடுத்துச் சென்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், தேரிக்குடியிருப்பு, குதிரைமொழி தேரியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா, கடந்த நவ., 17ம் தேதி துவங்கி, தினசரி சிறப்பு பூஜையும், வில்லிசையும் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சிகள், கடந்த 14ம் தேதி காலை ஐவர்ராஜா, மாலை அம்மன் பூஜையும், மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு மாக்காப்பு தீபராதனை நடந்தது. 15ம் தேதி காலை 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12:00 மணிக்கு சிறப்பு விசேஷ அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 7:00 மணிக்கு புஷ்பாஞ்சலியும், தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 9:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலாவும், கோயில் கலையரங்கத்தில் இரவு 10:00 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது . நேற்று காலை 6:00 மணிக்கு 108 பால்குட ஊர்வலம், காலை 9:00 மணிக்கு கற்குவேல் அய்யனார், சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மிரபரணி தீர்த்தம் எடுத்து மேளதாளத்துடன் வருதல், 10:00 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நண்பகல் 12 : 00 மணிக்கு அபிஷேக மற்றும் தீபாராதனையும், மாலை 4:00 மணிக்கு பிரசித்திப்பெற்ற கள்ளர் வெட்டு நிகழ்ச்சிக்கு சுவாமிகள் புறப்படுதல், மாலை 4:30 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மண் ஏரியில், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடந்தது. பின்னர், கள்ளர் என்னும் இளநீர் வெட்டிய இடத்தில், மக்கள் போட்டி போட்டு புனித மணல் எடுத்து சென்றனர். இந்த மணலை பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். மேலும் விவசாய நிலங்கள், நல்ல செயல்கள் நடக்கும் போதும் இந்த மணலை பயன்படுத்துவார்கள். இதில் துணை ஆணையர் வெங்கடேஷ், துாத்துக்குடி மாவட்ட பா. ஜ . , பொதுச் செயலாளர் சிவமுருகன் ஆதித்தன்கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ர்கள், புனித மணல் எடுத்துச் சென்றனர். ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர்,கோயில் அஜித், செயல் அலுவலர் காந்திமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.