பதிவு செய்த நாள்
17
டிச
2022
11:12
சூலூர்: ராசிபாளையம் அத்தனூர் அம்மன் கோவில் ஆண்டுவிழா பூஜை நடந்தது. சூலூர் அடுத்த ராசிபாளையம் மற்றும் அருகம்பாளையம் கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட அத்தனூர் அம்மன் கோவில் பழமையானது. இங்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, கடந்த, அக்., 28 ம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் அம்மனுக்கு, மண்டல பூஜை அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன் தினம், 48 வது நாள் மண்டல பூஜை நிறைவை ஒட்டி, ஹோமம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், அபிஷேகம் நடந்தது. அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பூஜை ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்