Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜபாளையம் சஞ்சீவி மலையில் படி பூஜை விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அஷ்டமி வழிபாடு விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் மார்கழி சிறப்பு பூஜை: அதிகாலையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கோயில்களில் மார்கழி சிறப்பு பூஜை: அதிகாலையில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 டிச
2022
03:12

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை நேற்று துவங்கியது.

கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நேற்று துவங்கியது. இதனையொட்டி, பெருமாள் தாயாருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து 30 நாட்கள் நடக்கிறது. கண்ணன் பாகவதர் தலைமையிலான குழுவினர் முக்கிய வீதிகளின் வழியாக ராமநாம சங்கீர்த்தன பஜனை செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல் சிவகாம சுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர், முத்துமாரியம்மன், திரவுபதி அம்மன், கங்கையம்மன், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கற்பக விநாயகர், சக்தி விநாயகர், அண்ணா நகர் துர்கையம்மன் ஆகிய கோவில்களிலும் மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

திருக்கோவிலுார்: நடுநாட்டு திருப்பதி என பக்தர்களால் போற்றப்படும் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு, முதல் நாளான நேற்று துவங்கியது. அதிகாலை 4:30 முதல் 5:30 மணி வரை மூலவர் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து திருப்பாவை சாற்றுமுறை, காலை 9:00 முதல் 10:00 மணி வரை நடை சாத்தப்பட்டு, நித்திய பூஜைகள் நடந்தது. காலை 10:00 முதல், மதியம் 12:30 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாடு தொடங்கியது. தொடர்ந்து 5:45 முதல் 7:00 மணி வரை நித்திய பூஜைகள் நடந்தது. இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மார்கழி மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவின் துவக்கமாக வரும் 23ம் தேதி பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. ஜனவரி 3ம் தேதி வைகுண்ட ஏகாதசி, அதனைத் தொடர்ந்து இராப்பத்து உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜீயர் தேகளீச ராமானுஜாச்சார்யார் சுவாமிகள் அறிவுரைபடி, தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ரலிங்கேஸ்வரர் கோயிலில் நடந்த மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar