பதிவு செய்த நாள்
18
டிச
2022
07:12
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் ஜன., 2 அன்று வைகுண்ட ஏகாதசி நாள் கொண்டாடப்பட உள்ளது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, டிச., 23 அன்று பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. இதன்படி பெருமாள் தினமும் காலை 9:00 மணிக்கு, தாயார் சன்னதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அர்ச்சகர்கள் தினமும் பிரபந்தங்கள் வாசித்து, பஜனைகள் பாடிய பின், 11:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்படும். தொடர்ந்து ஜன., 1 அன்று மாலை 4:00 மணிக்கு பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும், மோகினி அவதாரத்தில் வலம் வருவார். பின்னர் மாலை 6:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மறுநாள் காலை 5:00 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் பெருமாள் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அன்று தொடங்கி ராப்பத்து உற்சவமும், ஜன., 9 அன்று வேடு பறி உற்சவம், ஜன., 12-ல் நம்மாழ்வார் மோட்சம் உள்ளிட்ட விழாக்கள் நடக்க உள்ளது.
*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி ஜன., 2 அன்று காலை 5:30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. மறுநாள் தூவாதசி விழாவையொட்டி, பெருமாள் கருட வாகனத்தில் வீதி வலம் வருவார்