பதிவு செய்த நாள்
19
டிச
2022
08:12
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம், நயினார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், சிவன் கோயில்களில் ஜன., 6 அன்று ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது.
*பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், டிச., 28 அன்று மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. அன்று தொடங்கி தினமும் காலை, மாலை மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை வாசிக்கப்படும்.
தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு மாணிக்கவாசகர் ஆடி வீதியில் வலம் வருவார். ஜன., 5 இரவு 7:00 மணிக்கு உற்சவர் சிவகாம சுந்தரி, நடராஜர் மூர்த்தி பச்சை சாத்தி புறப்பாடு நடைபெறும்.
அன்று இரவு 8:00 மணிக்கு கோயில் மகா மண்டபத்தில் நடராஜரின் ஆனந்த தாண்டவம் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் அதிகாலை 4:00 மணி தொடங்கி, சிறப்பு ஹோமங்கள் நிறைவடைந்து, ஆருத்ரா மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடக்க உள்ளது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, இரவு சிறப்பு தீப ஆராதனைகள் நடக்கும்.
*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் காப்பு கட்டுதலுடன் துவங்கும் விழா, தொடர்ந்து ஜன., 5 இரவு ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சியும், மறுநாள் காலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்க உள்ளது.
*இதேபோல் எமனேஸ்வரத்தில் எமன் ஈஸ்வரனை பூஜித்த எமனேஸ்வரமுடையவர் கோயில் மற்றும் நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலிலும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடக்க உள்ளது.