பதிவு செய்த நாள்
19
டிச
2022
08:12
அவிநாசி: திருமுருகன்பூண்டி ஸ்ரீ ஐயப்பா சேவா அறக்கட்டளையின் 12ம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு கணபதி ஹோமம், சங்காபிஷேகம், லட்சார்ச்சனை பெருவிழா நடைபெற்றது.
இதனையடுத்து முன்னதாக கணபதி ஹோமம், லட்சார்ச்சனை, மகாதீபாரதனை நடைபெற்றது. நேற்று திருமுருகநாதர் கோவிலில் இருந்து 200ம் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பால்குடம் ,தீர்த்த குடங்கள் எடுத்து ஊர்வலமாக ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து தீர்த்தாபிஷேகம், கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.திருமுருகநாதர் கோவில் சிவாச்சாரியார் கிருபாகர கிரி குருக்கள் பூஜைகளை நடத்தினார் .இவ்விழாவிற்கு தலைவர் சண்முகம், செயலாளர் சிவகுமார், பொருளாளர் மோகன்ராஜ், குருசாமிகள் சிவக்குமார், ரமேஷ், குணசேகர், பிரபு, முனியசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.திருக்கோவில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் சார்பில் மண்டல பூஜையை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.