திருநெல்வேலி: செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் மெகா உழவாரப்பணி நடந்தது. நெல்லை அருகேயுள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி கோயிலில் மெகா உழவாரப்பணி நேற்று நடந்தது. நெல்லை ஆடல் அரசன் அருட்பணி அறக்கட்டளை, துாத்துக்குடி திருத்தாண்டகவேந்தர் உழவாரப்பணி, நாகர்கோவில் அப்பர் மன்றம், கோவில் பட்டி ஆடல் அரசன் அருட்பணி அறக்கட்டளை, ஞானமா திருப்பெருந்துரையான் அருட்பணி மன்றம், காருகுறிச்சி ஆடலரசன்அருட்பணி அறக்கட்டளையைசேர்ந்த தொண்டர்கள் மற்றும் சிவனடியார்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோயில் சுற்றுச்சுவரை சுத்தம் செய்தல், கொடிமரம், செப்பறை சன்னதி, விளக்குகள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டன. ஏற்பாடுகளை செப்பறை கோயில் உழவாரப்பணி குழுவினர் செய்திருந்தனர்.