அன்னூர்: அன்னூர் ஐயப்பன் கோவிலில் தீர்த்த கலசம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. அன்னூர் நஞ்சுண்ட விநாயகர், ஐயப்பன் திருக்கோவிலில், 53ம் ஆண்டு திருவிழா கடந்த, 17ம் தேதி மாலை வாஸ்து பூஜையுடன் துவங்கியது. நேற்று அதிகாலையில் வேள்வி பூஜையும், காலை 6:00 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. மாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்த கலசம் கொண்டு வரும் நிகழ்ச்சி இன்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர், நாளை காலை 6:30 மணிக்கு ஐயப்பனுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு மகா தீபாராதனையும், மாலையில் ஆன்மீக சொற்பொழிவும் நடக்கிறது. வரும் 21ம் தேதி மதியம் 1:30 மணிக்கு யானை, செண்டை மேளம், ஜமாப் இசையுடன், ஐயப்ப சுவாமி திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக நடக்கிறது.