Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் ... ஐயப்பன் கோயிலுக்கு வாஸ்து பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் 29 நாளில் ரூ.19.24 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2022
03:12

பழநி: பழநி, முருகன் கோயிலில் 29 நாட்களில் ரூ.19 கோடியே 24 லட்சம், கிடைத்துள்ளது.

பழநி முருகன் கோயிலில் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்களின் வருகை ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் இருந்தது. நவ.17 முதல் டிச.,15 வரையிலான 29 நாட்களுக்கு 10 லட்சத்தி 84 ஆயிரத்து 242 பக்தர்கள் மலைக்கோயில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் மலைக்கோயில் செல்ல பயன்படும் ரோப் கார் சேவையை ஒரு லட்சத்து ஏழு ஆயிரத்து 678 நபர்களும், வின்ச் சேவையை ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 956 நபர்களும் பயன்படுத்தியுள்ளனர். நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 549 பக்தர்கள் புலவருந்தி உள்ளனர். மலைக் கோயிலில் வழங்கப்படும் விலையில்லா பஞ்சாமிர்த பிரசாதத்தை மூன்று லட்சத்து 97 ஆயிரத்து 125 பேர் பெற்றுள்ளனர். மேலும் படிப்பாதை, யானை பாதையில் வழங்கப்படும் நீர் போர் சுக்கு காபி போன்றவற்றை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 பக்தர்கள் பெற்று பயன் அடைந்துள்ளனர். அபிஷேக பஞ்சாமிர்த பிரசாத விற்பனை மூலம் ரூ.எட்டு கோடியே 58 லட்சத்தி 3 ஆயிரத்து 710 கிடைத்துள்ளது. லட்டு, முறுக்கு, புளியோதரை, சர்க்கரை பொங்கல் விற்பனை மூலம் ரூ.70 லட்சத்து 3 ஆயிரத்து 485 கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கையாக ரூ. மூன்று கோடியே 75 லட்சம் கிடைத்துள்ளது. கார்த்திகை மாதத்தில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களின் மூலம் தங்க ரதம் தங்கத் தொட்டில் தரிசன விற்பனைச் சீட்டு பிரசாத விற்பனை என மொத்தம் ரூ. 19 கோடியே 24 லட்சம் என கோயில் இணைஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: செம்பொற்சோதிநாதர் கோவிலில் மூலவர் சுவாமி வெள்ளி கலச நாக ஆபரணம் அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar