ராஜபாளையம்: ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெரு, சடைஉடையார் சாஸ்தா கோயிலில் ஞான சாஸ்தா அய்யப்ப பக்தர்கள் சார்பில் 21வது ஆண்டு முப்பெரும் விழா நடந்தது. மூன்று நாள் நடைபெற்ற விழாவில் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை, சனிக்கிழமை கன்னி பூஜை, நாம சங்கீர்த்தன பஜனை, நேற்று சிறப்பு அன்னதானம் நடந்தது. புலவர் சடை உடையார் சாஸ்தா, பூர்ணா, உன்னை வனத்தாய் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.