ஆவணிமாதம் பிள்ளையார் சதுர்த்தி என்று கணக்கிடக்கூடாது. ஒருவருடத்தின் 12 மாதங்களும் இரண்டு வகையாகக் கணக்கிடப்படுகின்றன. சூரிய சஞ்சாரத்தை வைத்துக் கணக்கிடப்படும் மாதங்களுக்கு ஸௌரமான மாதங்கள் என்று பெயர். இது சித்திரை முதல் பங்குனி முடிய உள்ள மாதங்கள். சந்திரனின் வளர்பிறை தேய்பிறை அடிப்படையில் அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதி முதல் அமாவாசை வரையிலான நாட்களை சாந்திரமானமாதம் எனக்குறிப்பிடப்படுகிறது. கோயில் உற்சவங்கள் பண்டிகைகள் சிவராத்திரி முதலியன இந்த ஸௌரமான மாதங்களின் அடிப்படையிலேயே கொண்டாட வேண்டும்.
நவராத்திரி கந்தஷஷ்டி விநாயகசதுர்த்தி மற்றும் விரதங்கள் எல்லாம் சாந்திரமான மாத அடிப்படையில் அனுஷ்டிக்க வேண்டும். சைத்ரம் வைசாகம் என இம்மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. பாத்ரபதம் எனும் மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி ஶ்ரீவிநாயக சதுர்த்தி எனப்படுகிறது. இது சிலசமயம் ஆவணியிலும் சிலசமயம் புரட்டாசியிலும் வரும். அடிப்படை என்னவென்றால் ஆவணிமாத அமாவாசைக்கு மறுநாள் பாத்ரபத மாதம் பிறக்கிறது. மாதக்கடைசியில் இவ்வருடம் அமாவாசை வருவதால் புரட்டாசி முதல்தேதி சதுர்த்தி திதி வருகிறது. எனவே ஸௌரமானமாதமாகிய ஆவணியை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பாத்ரபதமாத சதுர்த்தீ என்பதை கவனத்தில் கொண்டால் எந்தக்குழப்பமும் வராது. அந்தவகையில் 2023 ம் ஆண்டு புரட்டாசிமாதம் முதல்தேதி (18.09.2023) திங்கட்கிழமையன்றே விநாயக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.