புலியூர் பாம்பாட்டி சித்தர் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2022 10:12
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் புலியூர் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, 12ம் தேதி அனுக்கை, எஜமானர் சங்கல்பம், விநாயகர் பூஜை, கும்ப ஆவாஹனம், ேஹாமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, 13ம் தேதி விநாயகர் பூஜை. இரண்டாம் கால பூஜை, யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிேஷகம் 14ம்தேதி காலை 10.45 மணிக்கு நடைபெற்றது. பாம்பாட்டி சித்தர் கோபுரம் மற்றும் இதர கோபுரங்களுக்கு நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும், பாம்பாட்டி சித்தருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி பாலா சித்தர் செய்திருந்தார்.