பதிவு செய்த நாள்
20
டிச
2022
08:12
கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதல், வரும், 29ம் தேதி நடக்கிறது. ஈரோடு மாவட்டம் கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஜனவரியில் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். கடந்த, 2020ல், ஜன.,9ல் நடந்த விழாவுக்கு பின், கொரோனா தொற்றால், 2021 மற்றும் ௨௦௨௨ல், பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப் படவில்லை. மாறாக இந்த இரு ஆண்டுகளும் பூசாரிகள், சேவகர்கள், வீரமக்கள் என சில நுாறு பேர் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நடப்பாண்டு குண்டம் தேர் திருவிழா, வரும், 29ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 2023 ஜன., 9ல், சந்தனக்காப்பு அலங்காரம், ஜன., 12ல் குண்டம் இறங்குதல், 13ல் தேரோட்டம், 14ல் மலர் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. கொரோனாவால் இரண்டு ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் குண்டம் இறங்க, கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு தீவிரமாக நடக்கிறது.