சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஒரு வழிப்பாதை அறிவிப்பு எப்போது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2022 04:12
கம்பம்: சபரிமலைக்கு செல்லும் வாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கம்பமெட்டு ரோட்டில் வாகனங்களை திருப்பி விட உடனே அறிவிப்பு வெளியிட வேண்டும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலிற்கு ஆண்டுதோறும் மகரவிளக்கு சீசனில் 2 மாதங்களுக்கு தென் மாநிலங்கள் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம். பக்தர்களின் வாகனங்கள் குமுளி மலைப்பாதை வழியாக சென்று வரும் போது, வாகன நெரிசல் ஏற்படும். வாகன நெரிசலை தவிர்க்க சபரிமலை வாகனங்களை கம்பத்தில் இருந்து கம்பமெட்டு வழியாக திருப்பி விடுவார்கள். கோயிலிலிருந்து வரும் வாகனங்கள் மட்டுமே குமுளி மலைப் பாதையில வரும். இந்தாண்டு கார்த்திகை முதல தேதியிலிருந்தே வாகனங்களின் எண்ணிககை அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்கு தரிசத்திற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொடுகிறது. இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து வாகனங்கள் அதிகமாக வரத துவங்கி உள்ளது. இரவு நேரங்களில் குமுளி மலைப்பாதையில் கடும போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக ஏல விவசாயிகள் கூறி உள்ளனர். எனவே கம்பமெட்டு ரோட்டில் சபரிமலை வாகனங்களை திருப்பி விடும் அறிவிப்பை எஸ்.பி.பிரவின் உமேஷ் டோஙரே வெளியிட வேண்டும்.