காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் மார்கழி ( தனுர்) மாதத்தையொட்டி கடந்த 17 .12.22 முதல் 15 .1. 2023 வரை மனோன்மணி (ஆண்டாள்) வீதி உலா பெற்று வருகிறது . இந்நிலையில் இன்று 20.12. 22 செவ்வாய்க்கிழமை காலை நான்காவது நாளான இன்று ஆண்டாள் உற்சவம் மூர்த்திக்கு( கொப்பியம்மனை) பல்வேறு (சுகந்த) நறுமண மலர்களால் கண் கவரும் வகையில் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடத்தியதோடு தீப தூம் நெய் வேத்தியங்களை கோயில் வேத பண்டிதர்கள் சமர்ப்பித்தனர். தொடர்ந்து கோயில் அலங்கார மண்டபத்தில் இருந்து மேளதாளங்கள் மங்கள வாத்தியங்களுக்கு இடையே வேத பண்டிதர்களால் வேத மந்திரங்கள் முழங்க (ஆண்டாள்) மனோன்மணி (கொப்பி அம்மன்) ஊர்வலம் கோயிலில் இருந்து நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது .ஊர்வலத்தின் போது பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் கோயில் ஆய்வாளர்கள் சுரேஷ் ரெட்டி பத்ரய்யா மற்றும் அதிகாரிகள் ஜெகதீஷ் ரெட்டி, சுரேஷ் மற்றும் கோயில் ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.