அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி: 1000 லிட்டர் பால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2022 09:12
திண்டுக்கல்: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் நாளை 22ம் தேதி மற்றும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி சிறப்பாக நடைபெற உள்ளது.
வைகை நதியே தென்பாகமே அமைத்து வளம் கொழிக்கும் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி மாநகர் மேட்டுப்பட்டியில் அமைந்த அஞ்சலி வரத ஆஞ்சநேயர் சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். இவருக்கு நாளை அனுமத் ஜெயந்தி விழா வைபவம் மிகவும் விமர்சையாக நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு நாளை 22.12.22 காலை 8.00 மணி முதல் பஞ்ச சூக்த ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், அனுத் சகஸ்ர நாம ஹோமம், 10-00 மணியளவில் மஹா பூர்ணாஹுதி. நடைபெற உள்ளது. தொடந்து காலை 10.30 மணியளவில் மிக பிரம்மாண்டமான அபிஷேகம் 1000 லிட்டர் பால் அபிஷேகம், 108 இளநீர் அபிஷேகம் மற்றும் 16 வகையான திரவியங்களுடன் அபிஷேகமும் அதை தொடர்ந்து ஏழுவகையான வர்னாபிஷேகமும் நவ கலச கும்ப அபிஷேகமும் நடைபெற உள்ளது. 23.12.22 தேதி வெள்ளிக்கிழமை ராஜாதி ராஜனாக ஆஞ்சநேயர் சுவாமி அருள்பாலிப்பார். சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.