பழநி: பழநி மலைக் கோயில் கும்பாபிஷேகம் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பழநி மலைக்கோயிலில் 2006ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. கொரானா மற்றும் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேக பணிகள் மெதுவாக நடைபெற்றது. தற்போது கடந்த சில நாட்களுக்கு முன் கோயில் அறங்காவலர் குழுவினர் 2023 ஜன.,27 அன்று கும்பாபிஷேகம் மலை கோவில் மூலவர் சன்னதிக்கு நடைபெறும் என அறிவித்தனர். அதனை தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகிறது. கோயில் உட்பிரகாரங்களில் வர்ணம் தீட்டுதல், சித்திரங்கள் வரைதல் தூண்கள் சரி செய்தல், சுவர்களுக்கு வண்ணம் அடித்தல், சுதை சிற்பங்கள் சரி செய்தல், தங்க கலசம் மற்றும் தங்க கோபுரம் பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர். மேலும் மலைக்கோயில் சன்னதியில் பொருத்தப்பட்டிருந்த பழைய ஏ.சி., இயந்திரத்தை கழற்றி ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய ஏ.சி இயந்திரம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரத்தும் சுதை சிற்பங்கள் அனைத்தும் வர்ணம் அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. மேலும் பிரகார சுவர்களில் உள்ள சுதை சிற்பங்கள் மெருகேற்றப்பட்டு வருகின்றன. சுவர்களுக்கு வர்ணம் அடிக்கப்பட்டு வருகிறது. பணிகளை அதிகாரிகள் துரிதமாக செய்து வருகின்றனர்.