அன்னூர்: அன்னூர் ஐயப்பன் கோவில் திருவிழாவில் ஜமாப் இசையுடன், யானை ஊர்வலம் நடந்தது. அன்னூர் நஞ்சுண்ட விநாயகர், ஐயப்பன் திருக்கோவிலில், 53ம் ஆண்டு திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 19ம் தேதி பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்த கலசம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை ஐயப்பனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. நேற்று மதியம் 3 :00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை, செண்டை மேளம், ஜமாப், விளக்காட்டம், நரசிம்மர் வேட உலா மற்றும் ஐயப்ப பக்தர்களின் பஜனை உடன் ஐயப்ப சுவாமி திருவீதி உலா கோவிலில் இருந்து புறப்பட்டது. தென்னம்பாளையம் ரோடு, எக்ஸ்சேஞ் ரோடு, கோவை ரோடு வழியாக இரவு 7:00 மணிக்கு மீண்டும் கோவிலை அடைந்தது. வீதிகளில் பக்தர்கள் இருபுறமும் நின்று ஐயப்பனை வரவேற்றனர். விளக்காட்டம் பலரையும் கவர்ந்தது.