கிருமாம்பாக்கம் சோலை வாழியம்மன் கோவில் தெப்பல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2012 11:09
கிருமாம்பாக்கம்: கிருமாம்பாக்கம் சோலை வாழியம்மன் கோவில் தெப்பல் திருவிழா நேற்று நடந்தது. இக்கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.30ம் தேதி வரை தினமும் சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடந்தது.முக்கிய நிகழ்வான தெப்பல் உற்சவம், நேற்று இரவு கெங்கா பவானி அம்மன் கோவில் குளத்தில் நடந்தது. கிருமாம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.இன்று 1ம் தேதி காலை 7.30 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிருமாம்பாக்கம் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செ#துள்ளனர்.