ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆரோக்கிய அன்னை பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆர்.எஸ்.மங்கலம் வட்டார அதிபர் ஜெயபதி தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இத்தாலி மத்ரோ மறைமாவட்ட அதிபர் சபரிராஜ், பங்கு கமிட்டி துணைத் தலைவர் வேதமாணிக்கம், பொருளாளர் ராஜமாணிக்கம், உறுப்பினர் குழந்தையேசு உட்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். செப்.,8 காலை 8.30க்கு தேர்பவனி நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு, நவநாள் திருப்பலி நடக்கிறது.