Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் உயர் ... நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது நாகூர் தர்கா கந்தூரி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பக்தர்கள் கூட்டம் : காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பழநியில் பக்தர்கள் கூட்டம் : காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

25 டிச
2022
02:12

பழநி: பழநி மலைக்கோவிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் முருக பக்தர்கள் வருகை அதிகரித்து இருந்தது.

பழநியில் மலைக் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்திலிருந்து அதிக அளவில் தனியார் வாகனங்களில் வந்தனர். விடுமுறை நாளை முன்னிட்டு வெளியூர், வெளி மாநில முருக பக்தர்கள் வருகையும் அதிக அளவில் வருகை புரிந்தனர். வாகனத்திற்கு அபராதம்: பழநி மலைக்கோயில் வந்த வெளி மாநில வாகனங்கள் இலவச வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பியதால், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, அய்யம்புளி ரோடு, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்தி இருந்தனர். போதுமான வாகனங்கள் நிறுத்த வசதி இல்லாததால் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியிருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

வாகனங்களை நிறுத்த முறையான இட வசதியை ஏற்படுத்த வேண்டும். நகரில் வாகனங்கள் போக்குவரத்து அதிகம் இருந்ததால் அடிவாரம் அய்யம்புள்ளி ரோடு கிரிவிதி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநி, தேவஸ்தான விடுதிகளில் அனைத்து அறைகளும் நிரம்பின. பக்தர்கள் அறை கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். போலீசார் பற்றாக்குறை: தனியார் மற்றும் தேவஸ்தான கடைகளில் பக்தர்கள் அதிக அளவில் பஞ்சாமிர்தம் வாங்க கடைகளில் கூட்டம் நிரம்பியது. மலைக்கோயிலில் காலை முதல் வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரோப் கார், வின்ச் பகுதிகளில் முன்னுரிமை கேட்டு பலர் வந்ததால் அதிகாரிகள் சிரமம் அடைந்தனர். ஆக்கிரமிப்பால் தொல்லை: பழநி, கிரிவீதியில் சாலையோரம் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளதால் பக்தர்கள் அதிக சிரமம் அடைந்து வருகின்றனர். கிரிவிதியின் நடுவில் வட மாநிலத்தவர் தட்டு கடைகளை வைத்து பக்தர்களை தொல்லை செய்து வருகின்றனர். மேலும் அவர்களின் சிறுவர், சிறுமிகள் பக்தர்களிடம் யாசகம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். கிரி வீதி, சன்னதி வீதி, அய்யம்புள்ளி சாலையில் செல்லும் வாகனங்களுக்கு செல்ல பக்தர்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கட்டுப்பாடு இல்லாத ஆக்கிரமிப்பு: பழநி அடிவாரம் பகுதியில் வெளி மாநில வெளி ஊர் பக்தர்கள் அதிக அளவில் வந்து குவிவதால் கிரி வீதி, சன்னதி வீதி அய்யம்புள்ளி பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வியாபாரம் அதிகரித்துள்ளது. இதில் பல கோடி ரூபாய் வியாபாரம் நடைபெறும். ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் பெருகி வருகிறது. தட்டுக்கடைகள் மற்றும் குடைகடைகள், தள்ளுவண்டிகளில் புதுப்புது கடைகள் உருவாகின்றது. இவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar