கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் பவுர்ணமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2012 02:09
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பாலாபிஷேகம் செய்யப்பட்டது. உச்சிகால பூஜையைத் தொடர்ந்து, இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் நடந்த விசேஷ பூஜையில், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* கோனூர் வீருநாகம்மாள் கோயிலில், பவுர்ணமி பூஜை நடந்தது. சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.