Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரியங்காவு தர்ம சாஸ்தா புஷ்கலா தேவி ... ஸ்ரீதேவி பூமிதேவியுடன் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் ஸ்ரீதேவி பூமிதேவியுடன் சீனிவாசப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருக்கன்குடியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
இருக்கன்குடியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

26 டிச
2022
10:12

அருப்புக் கோட்டை- இருக்கன்குடியில் அருகே நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் விஜயராகவன் தலைமையில், வரலாற்று ஆய்வாளர்கள் ராஜபாண்டி, சரத்ராம், காசிராஜன், பழனிக்குமார் ஆகியோர் இருக்கன்குடி அருகே கைலாசபுரத்தில் கள ஆய்வு செய்தனர். அங்கு ஒரு தனியார் நிலத்தில் இருந்த கல்வெட்டை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டை ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இயக்குனர் சாந்தலிங்கம் உதவியோடு படித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: 4 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட இந்த கல்வெட்டில் 29 வரிகள் காணப்படுகின்றன. அதில் விசுவாசு வருடம் கி.பி., 1666 ம் ஆண்டு பங்குனி மாதம் 25ல் சொக்கநாத நாயக்கர் வடமலையப்பன் புண்ணியமாக கைலாசநாதர் சாமிக்கு நிலக்குடையாக (திருவிடையாட்டம்) வழங்கி உள்ளார்.

இந்த நிலம் கைலாசநாதர் நல்லூர் என்று அழைக்கப்பட்டதாகவும், இந்த ஊரில் குடியேறிய மக்கள் எந்த வித வரியும் செலுத்த வேண்டாம் என்று ஊர் சபை முடிவு எடுத்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் சில இடங்களில் உள்ள எழுத்துக்கள் தேய்ந்து உள்ளதால் அதன் உண்மை பொருளை அறிய முடியவில்லை. நாயக்க மன்னர் காலத்தில் கைலாசநாதர் நல்லூர் என்று அழைக்கப்பட்டது. இந்த ஊர் தற்போது மருவி கைலாசபுரம் என்று அழைக்கப்படுகிறது. கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சொக்கநாத நாயக்கர் (கி.பி.1659--86) மதுரையை ஆட்சி செய்த 9 வது நாயக்க மன்னர் ஆவார். இவருடைய மனைவி ராணி மங்கம்மாள். விருதுநகர் மாவட்டத்தில் இம்மன்னருடைய கல்வெட்டுகள் திருச்சுழி, என்.மேட்டுப்பட்டி, நென்மேனி ஆகிய ஊர்களில் உள்ளது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar