Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகர் கோயிலில் பாலஸ்தாபனம் அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில் கொடியேற்றம் அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

29 டிச
2022
09:12

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அடுத்த மாதம் 5 ம் தேதி, தேரும். 6-ம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழியில் ஆருத்ரா தரிசனம், ஆனியில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் உள்ளே உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு. மந்திரங்கள் முழங்க உத்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். பின்னர் தீபாராதனை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று முதலே, பஞ்ச மூர்த்தி வீதியுலா துவங்கியது. இன்று வெள்ளி சந்திர பிரபை வாகன வீதியுலா, நாளை தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலாவும், 31-ம் தேதி பூத வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது. ஜனவரி 1-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 2-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதியுலாவும், 3-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது. ஜன.4-ம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதிஉலாவும் நடைபெற உள்ளது. அதனையடுத்து முக்கிய விழாவான தேர் திருவிழா ஜனவரி 5 ம் தேதி நடைபெற உள்ளது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. தொடர்ந்து 6 ம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன், காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா சென்று வந்த பின் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும். ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெற உள்ளது. 7- ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவோடு உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர். உற்சவம் நடைபெறும் 10 நாட்களும், மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று துவங்கியது.திருமலையில், ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. வரும் ... மேலும்
 
temple news
கூடலூர்; கூடலூர் புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவிலில் ஆடி மாதத்தில் குடும்ப தோஷம் நீங்க , நடைபெற்ற ... மேலும்
 
temple news
வாசகர்களே! உங்கள் பகுதியில் உள்ள ஹிந்து கோவில்கள் பற்றிய சிறப்புகளை சேர்க்க இங்கே பதிவு செய்யுங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar