பதிவு செய்த நாள்
31
டிச
2022
06:12
சின்னாளபட்டி: சின்னாளபட்டி ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழாவில், சுவாமிநாத சுவாமிகள் சிலை பிரதிஷ்டை நடந்தது. சின்னாளபட்டியில் சுவாமி தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில், சுவாமிநாத சுவாமிகள் சபரிமலை யாத்திரை குழுவின் 65ம் ஆண்டு மண்டல பூஜை டிச. 29ல் துவங்கியது. சிறப்பு மலர் அலங்காரம், அபிஷேக ஆராதனைகளுடன், சுவாமிநாத சுவாமிகள் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று, சுவாமிகளின் குருபூஜை நடந்தது. தொடர்ந்து புஷ்பாஞ்சலி, பக்தி பஜனை, சக்தி பூஜை நடந்தது. இன்று (டிச. 31ல்), மாலை 3 மணிக்கு கணபதி ஹோமம், மகா அபிஷேகத்துடன் துவங்கி மண்டலபிஷேகம் நடக்க உள்ளது. அகவல் பாராயணத்துடன், கடபூஜை, சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. நாளை (ஜன. 1ல்) திருவிளக்கு பூஜை, அன்னதானம், ஜன. 2ல் ரத ஊர்வலம் நடக்கிறது. சுவாமி தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.