திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 11:01
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளினார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திகாலை 3:00 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து நித்திய பூஜை, 4:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமரை, 4:45 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீசபெருமாள், பாண்டியன் கொண்டை, செண்டை பேரண்ட்டை பட்சி பதக்கம் அணிந்து, கிளி மாலை சாத்தி ஆஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, ராமானுஜர் சன்னதியில் விசேஷ ஆராதனை நடந்தது. காலை 5:30 மணிக்கு பரமதவாசல் திறக்கப்பட்டு, நம்மாழ்வார் எதிர்கொண்ட சேவை, நம்மாழ்வார் திருவாய்மொழி துவக்கம், சுவாமி ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருள பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமியை வழிபட்டு சென்றனர். ஜீயர் ஸ்ரீதேகளீசராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் ஏஜன்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நாளை முதல் இராப்பத்து உற்சவம் தூங்குகிறது.