தேனி விநாயகர் சிலைகள் கரைக்கப்படவேண்டிய இடங்கள் அறிவிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2012 10:09
தேனி: விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டத்தில், களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும், எவ்வித ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். இந்த வகை சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கலாம். ரசாயன வர்ணம் பூசப்பட்ட (பெயின்ட்) விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கண்டிப்பாக கரைக்ககூடாது. அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும். மாவட்டத்தில் கரைக்க வேண்டிய இடங்கள் விவரம்: பெரியகுளத்தில் பால சுப்பிரமணியன் கோயில் அருகே உள்ள வராக நதி, உத்தமபாளையத்தில் ஞானம்மாள் கோயில் படித்துரை, கம்பத்தில் தொட்டாந்துறை, தேனியில் அரண்மனைபுதூர் விலக்கு அருகிலும், ஆண்டிபட்டியில் வைகை அணை அருகில் உள்ள வைகை ஆற்றிலும், போடியில் வேட்டவராயன்கோயில் அருகே உள்ள கொட்டக்குடி ஆற்றிலும், சின்னமனூர் மற்றும் மார்க்கையன்கோட்டை பகுதிகளில் மார்க்கையன்கோட்டை ஆற்றுப்பாலம் அருகிலும் விநாயகர் சிலைகள் கரைக்க வேண்டும், என கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.