Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... இன்று போகி பண்டிகை: பழையன கழித்து, புதியன புகவிடும் நாள் இன்று போகி பண்டிகை: பழையன கழித்து, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் மே 24ல் கும்பாபிஷேகம்: தருமபுரம் ஆதீனம்
எழுத்தின் அளவு:
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் மே 24ல் கும்பாபிஷேகம்: தருமபுரம் ஆதீனம்

பதிவு செய்த நாள்

13 ஜன
2023
06:01

மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு மே 24ல் கும்பாபிஷேகம் நடைபெறும் என தருமபுரம் ஆதீனம் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.  இக்கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தவர்களை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோவில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோவிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய  திருஞானசம்பந்தருக்கு இக்கோவில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. பக்தர்கள்  மனதில் வேண்டுபவற்றை வேண்டிய மாத்திரத்திலேயே அருளும் சட்டை நாதர் கோவிலின் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது  சீர்காழியில் அமைந்துள்ள சட்டை நாதர் தேவஸ்தானம் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம்  24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இருபதாம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22ஆம் தேதி பரிவார மூர்த்தி களுக்கு கும்பாபிஷேகமும், 24ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோவில்  மகா கும்பாபிஷேகமும்  நடைபெற உள்ளது.  கும்பாபிஷேகத்தின் போது 18 ஆயிரம் பக்கம் 16 தொகுப்புகளாக திருமுறையும், 14 சாஸ்திரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் இவ்வாறு தெரிவித்தார். தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாகி செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். முன்னதாக தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ததுடன் கோவில் நந்தவனத்தில் நட்சத்திர நந்தவனத்திற்கான செடிகளை நட்டு வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar