Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூத்துக்குடியில் மழைவேண்டி நாளை ... திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2012
10:09

ஏரல்:ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா வரும் 11ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று கோயிலில் கால்நடப்பட்டது. ஏரல் மெயின் பஜாரில் அமைந்துள்ள சவுக்கை முத்தாரம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் நான்காம் செல்வாய்கிழமை கொடைவிழா நடக்கிறது. இந்த ஆண்டு கொடைவிழா வரும் 11ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று கோயிலில் கால்நாட்டு விழா நடந்தது. வரும் 10ம் தேதி இரவு 7 மணிக்கு கொலுமேளம், எக்காளம் சின்னம், வில்லிசை, இரவு 11 மணிக்கு மேளவாத்தியங்களுடன் ஊர் அழைப்பு, இரவு 1 மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு தீபஆராதனை நடக்கிறது. 11ம் தேதி கொடைவிழா அன்று காலை 8 மணிக்கு தாமிரபரணியிலிருந்து பால்குடம் எடுத்து மேளவாத்தியங்களுடன் நகர்வீதி வலம் வருதல், மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம், மஞ்சள் நீராடுதல் மற்றும் மதிய தீபஆராதனை, மாலை 3 மணிக்கு அம்மன் கேடயச் சப்பரத்தில் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து அம்மன் கும்பம் எடுத்து வருதல், இரவு 10 மணிக்கு புஷ்ப அலங்கார தீபாராதனை, 10.30 மணிக்கு ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலிலிருந்து அம்மன் கேடயச் சப்பரத்தில் புறப்பட்டு பொன் சப்பரத்திற்கு வருதலும் அம்மன் புறப்பாடு நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி, சிங்காரி, செண்டை மேளவாத்தியம், கரகாட்டம், வானவேடிக்கையுடன் ஏரல் நகர்வீதி வலம் வரும் முக்கிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 12ம் தேதி காலை மற்றும் மதியம் அம்மனுக்கு தீபாராதனை நடக்கிறது. 13ம் தேதி இரவு சென்னைவாழ் சவுக்கை முத்தாரம்மன் உறவின்முறை நாடார் சங்கம் சார்பில் திரைஇசைத் திருவிழா நடக்கிறது. 14ம் தேதி வழக்காடு மன்றம் 15ம் தேதி சிந்தனைப்பட்டிமன்றம், 16ம் தேதி நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar