பொள்ளாச்சி: பொள்ளாச்சி, திப்பம்பட்டி பூங்கா நகரில், பிரசித்திபெற்ற சிவசக்தி கோவிலில், விநாயகர், பாலமுருகன், விஷ்ணு, வாராஹி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன. நேற்று மார்கழி மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, பாலமுருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. அபிேஷக, அலங்கார பூஜைகளை தொடர்ந்து, முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.