கமுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி பஜனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2023 04:01
கமுதி: கமுதியில் உள்ள ராமானுஜ பஜனை மடத்தின் சார்பில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை நடைபெற்று வருகிறது.
கமுதி ராமானுஜ பஜனை மடம் குழுவின் சார்பில் மார்கழி மாதத்தில் மிருதங்கம் உள்ளிட்ட இசைக்கருவிகள் வைத்து திருப்பாவை,திருவெம்பாவை பாசுரங்கள் பாடி ஊர்வலமாக சென்று வழிபட்டு வருகின்றனர் .பஜனை மடத்தில் தொடங்கி காமாட்சி அம்மன், காளியம்மன்,விநாயகர்,பெருமாள், முருகன்,ஆஞ்சநேயர்,மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்துமாரியம்மன், உச்சமாகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயிலுக்கு ஊர்வலமாக சென்று பஜனை பாடல்கள் பாடி மார்கழி மாத வழிபாடு செய்து வருகின்றனர்.கௌர செட்டியார் உறவின்முறை டிரஸ்டி சேது மாதவன் தலைமையில் ராமானுஜ பஜனை குழு மற்றும் கௌரவ இளைஞர்கள் பலரும் ஊர்வலத்தில் சென்று வருகின்றனர். கமுதியில் ராமானுஜ பஜனை மடத்தின் சார்பில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாகவே பாரம்பரிய முறைப்படி மார்கழி மாதத்தில் திருப்பாவை உள்ளிட்ட பஜனை பாடல்கள் பாடி கோயில்களில் வழிபட்டு வருவது தொடர்கிறது என்று பஜனை குழுவினர் தெரிவித்தனர்.