Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் உத்ராயன ... திருமலையில் சுப்ரபாத சேவை மீண்டும் துவக்கம் திருமலையில் சுப்ரபாத சேவை மீண்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் மகரசங்காரந்தி விழா: 2 ஆயிரம் கிலோ காய்,கனிகளால் நந்திக்கு அலங்காரம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் மகரசங்காரந்தி விழா: 2 ஆயிரம் கிலோ காய்,கனிகளால் நந்திக்கு அலங்காரம்

பதிவு செய்த நாள்

16 ஜன
2023
11:01

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு, 2,000 கிலோ அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்பு வகையில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.,15ம் தேதி) மாலை, பால், தயிர் மற்றும் மஞ்சள் போன்ற பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, மாட்டு பொங்கலான இன்று (ஜன.,16) பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு உருளை கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு காய்கறி, ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்கள், பல்வேறு வகையான பதார்த்தங்களாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு 2,000 கிலோ அளவிலான பொருள்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மேலும், நந்திபெருமான் சிலை முன்பு 108 பசுக்கள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டு துணி போர்த்தப்பட்டு கோ பூஜைகள் செய்து வழிபாடு நடைபெற்றது. பின்னர் நந்திபெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் ... மேலும்
 
temple news
நத்தம்; தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்வது நத்தம் மாரியம்மன் கோவில் ஆகும். ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்டம் மார்ச் 12 ல் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகா, காக்கநல்லூர் கிராமத்தில் பெரியநாயகி சமேத பெரியாண்டவர் கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஸ்ரீ பர்வத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar