Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தை திங்கள் சிவன் கோயில்களில் ... ஆண்டாள் பறவைகளுக்கு அன்னம் அளிக்கும் வைபவம்: பெண்கள் வழிபாடு ஆண்டாள் பறவைகளுக்கு அன்னம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நந்தி பகவான், சூரிய பகவானுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரர்
எழுத்தின் அளவு:
நந்தி பகவான், சூரிய பகவானுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரர்

பதிவு செய்த நாள்

17 ஜன
2023
08:01

திருவண்ணாமலை: உழவர் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நந்தி பகவான் மற்றும் சூரிய பகவானுக்கு, அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன்  காட்சி அளித்தனர்.

உழவனின் நண்பனாக விளங்கும் கால்நடைகளுக்கு, மாட்டு பொங்கல்  நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில்,  ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள, 12 அடி உயர பெரிய நந்தி பகவான், கோவில் கொடிமரம் அருகிலுள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள  நந்திக்கு,  சிறப்பு அபிஷேக, பூஜை  செய்யப்பட்டது. பின்னர், பெரிய நந்தி பகவானுக்கு, வண்ண மலர்கள்,  ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்ட பலவகை பழங்கள்,  லட்டு, அதிரசம், முருக்கு, சீடை, பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு தின்பண்டங்கள்,  கத்திரி, முருங்கை, அவரை, வாழைக்காய் என பல காய்கறிகள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் என,  108 வகையான மாலைகளால் அலங்கரித்து, சிறப்பு பூஜை நடந்தது.

காலை, 6:00 மணிக்கு,  உண்ணாமுலைம்மன் சமேத அருணாசலேஸ்வரர்,  பராசக்தி அம்மன், நந்திபகவானுக்கு காட்சி அளித்தனர். பின்னர், ராஜகோபுரம் அருகிலுள்ள திட்டி வாயலில், சூரியபகவானுக்கு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மனும் ஒன்றாக எழுந்தருளி காட்சி அளித்தனர். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நந்தியம் பெருமானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அதிகமாக திரண்டதால், போலீசார் தடுப்பு வைத்து தடுத்தனர். ஆனால் அதன் மேல் பக்தர்கள் ஏறிச்சென்றனர். பக்தர்கள் கோவிலினுள் செல்ல போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யாததால், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தையுடன் வந்த பெற்றோர் கடும் அவதிக்கு ஆளாகினர். கோவில் கோசாலையில் பசுக்களை குளிப்பாட்டி, அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar