பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடந்தது. விழாவையொட்டி காலை, 5:30 மணிக்கு அங்காளம்மன், கொங்காளம்மனுக்கு அபிஷேக அர்ச்சனை, ஆராதனைகள், கரகம் அழைத்தல், மகா பூஜை நடந்தன. மதியம் பொங்கல், அபிஷேக ஆராதனை நடந்தது. அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.