சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் விநாயகர் கோயில் பால்குட விழா நடந்தது.
இங்குள்ள கட்டபொம்மன் தெரு விநாயகர் கோயிலில் தை உற்சவத்தை முன்னிட்டு 35 வது ஆண்டாக பால்குடம், அன்னதானம் விழா நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு சந்தி விநாயகர் கோயிலில் இருந்து கட்டபொம்மன் தெரு விநாயகர் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். 9:00 மணிக்கு விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார். தொடர்ந்து திருப்பணி குழு சார்பில் அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.