செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி அடுத்த பனமலை அஸ்தலாம்பிகை உடனுரை தாளகிரீஸ்வரர் கோவிலில், தாளகிரிஸ்வரர், அஸ்தலாம்பிகை மற்றும் நந்தீஸ்வரருக்கு மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். நந்திஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு சாமி வீதி உலாவும் நடந்தது. பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் கோவில் உலா வந்தனர். பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர்கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், மாக தீபாராதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி நந்தீஸ்வரை வழிபட்டனர்.