பதிவு செய்த நாள்
20
ஜன
2023
05:01
ஆர்.எஸ்.மங்கலம்: தை அமாவாசை தினத்தை முன்னிட்டு, ஆர். எஸ்.மங்கலத்தில் இருந்து, தேவிபட்டினத்திற்கு கூடுதல் பஸ் இயக்க பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் பல்வேறு தோஷங்களுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஆடி, தை அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக, நவபாஷாணத்திற்கு ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேவிபட்டினத்திற்கு வந்து செல்வது வழக்கம். ஆனால், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து தேவிபட்டினத்திற்கு காலை நேரத்தில், செல்வதற்கு போதிய பஸ் வசதிகள் இல்லாததால், ஆண்டுதோறும் ஆடி, தை அமாவாசை தினங்களில், ஆர்.எஸ். மங்கல பகுதியில் இருந்து செல்லும் பக்தர்கள், போதிய பஸ் வசதியின்றி கடும் சிரமம் அடைந்து வருவதுடன், வாடகை வாகனங்களில், கூடுதல் தொகை கொடுத்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். ஜன. 21, நாளை தை அமாவாசை தினம் என்பதால், ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, காலை நேரத்தில், தேவிபட்டினத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.