Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ... சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
களக்காட்டூர் வரதராஜ பெருமாள் கோவிலில் வனபோஜன உற்சவம்
எழுத்தின் அளவு:
களக்காட்டூர் வரதராஜ பெருமாள் கோவிலில் வனபோஜன உற்சவம்

பதிவு செய்த நாள்

24 ஜன
2023
11:01

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளிய வனபோஜன உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வரதராஜ பெருமாள் காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் கிராமத்திற்கு செல்லும் வனபோஜன உற்சவம் ஆண்டு தோறும் தை மாதம் நடைபெறும். இந்த உற்சவம் நேற்று நடந்தது. இதற்காக பெருமாள் நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டார். செல்லும் வழியில் சின்ன அய்யன்குளம், அண்ணா குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மண்டகப்படி நடந்தது. இதையடுத்து காலை 10:00 மணிக்கு களக்காட்டூர் பகுதியில் அமைந்துள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் வரதர் எழுந்தருளினார். அங்கு மண்டகப்படி நடந்தது. ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் முடிந்ததும், கோவிலில் இருந்து புறப்பட்டு கிராமங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. அந்தந்த தெருக்களில் மக்கள் காத்திருந்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி பெருமாளை தரிசனம் செய்தனர். மதியம், 1:30 மணிக்கு களக்காட்டூர் கிராமத்தில் இருந்து வரதர் புறப்பட்டு பாலாற்றுக்கு சென்றார். பாலாற்றில் எழுந்தருளிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு அலங்காரம் முடிந்து ஆற்றில் இருந்து புறப்பாடு நடந்தது. செல்லும் வழியில் ஸ்ரீரங்கராஜவீதி பகுதியில் மண்டகப்படி முடிந்து இரவு பெருமாள், கோவிலை சென்றடைந்தார். வனபோஜன உற்சவத்தின் போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar