Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ... கோவில் நிதியை அறநிலையத் துறை செலவுகளுக்கு பயன்படுத்த முடியாது கோவில் நிதியை அறநிலையத் துறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயில் படிப்பாதை சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயில் படிப்பாதை சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 ஜன
2023
10:01

பழநி: பழநி, மலைக்கோயில் படிப்பாதை சன்னதிகள் உப தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

பழநி, மலைக்கோயில், படிப்பாதை கோயில்களுக்கு (ஜன.26) இன்று காலை 5:30 மணிக்கு படிப்பாதை பாத விநாயகர் கோவில் முதலான உப தெய்வங்களுக்கு நிறைவு வேள்வி திருக்குட ஞானத் திருவுலா நடைபெற்றது. காலை 9:50 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் கிரி வீதியில் உள்ள மயில்கள், பாத விநாயகர் கோயில், படிப்பாதையில் உள்ள சேத்ரபாலர், சண்டிகாதேவி, விநாயகர், இடும்பன், கடம்பன், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரிஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுத சுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளிட்ட உப தெய்வ சன்னதி‌ கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைக் காண பக்தர்களுக்கு கட்டுப்பாடு இன்றி கோயில் நிர்வாகம் அனுமதிக்கிறது. இதனைத் தொடர்ந்து கந்தபுராணம் திருப்புகழ் முற்றோதல் நடைபெற்று ஆறாம் வேள்வி பூஜைகளான ஐந்திருக்கை, ஐந்து சுற்று பூஜை, தீ வளர்த்தல், சுள்ளிகுண்ட பூஜை, உருவேற்றல், விதை, வேர், இலை, தண்டு, பூ, காய், கனி, கிழங்கு, திரவியங்கள், அறுசுவை சாதம், பலகாரம், சுண்டல், பாயாசம், பால், தயிர், தேன், நெய், சமித்து 96 ஆகுதி, வேள்வி பட்டாடை ஆகுதி நிறைவேள்வி நடைபெறும். வேள்விச்சாலையில் காலை 8:00 மணிக்கு ஆறாம் கால வேள்வி நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு நிறைவேள்வி நடைபெறும். மாலை 5:30 மணிக்கு ஏழாம் கால வேள்வி, இரவு 8:30 மணிக்கு நிறை வேள்வியும் நடைபெறும். நாளை மறுநாள் (ஜன. 27) மலைகோயில் மூலவர் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். நேற்று (ஜன.25) நான்காம் கால வேள்வி காலை 9:00 மணிக்கு துவங்கியது. நிறைவேள்வி காலை 12: 45 மணிக்கு நடந்தது. ஐந்தாம் கால வேள்வி மாலை 5:30 மணிக்கு நிறைவேள்வி 8:30 மணிக்கும் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar