Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மதுர காளியம்மன் கோவிலில் ... கருமத்தம்பட்டி சிவ கணபதி கோவில் ஆண்டு விழா கருமத்தம்பட்டி சிவ கணபதி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலி வேட்டை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலி வேட்டை நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

28 ஜன
2023
10:08

கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா நடந்து வருகிறது. எட்டாம் நாளான நேற்று அய்யா வைகுண்ட சாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்பட்டார். தலைமைப்பதி தலைமை குரு பால ஜனாதிபதி தலைமை வகித்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் ஆனந்த், ஜனாயுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் முன்னிலை வகித்தனர். தலைமைப்பதியை சுற்றிவந்த வாகனம் முத்திரி கிணற்றங்கரைக்கு சென்றது. "அய்யா சிவ சிவ அரகரா அரகரா" என்று பக்தர்கள் கோஷம் முழங்க அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. முத்திரி கிணற்றங்கரையில் பக்தர்களுக்கு பதம் வழங்கப்பட்டது. அங்கிருந்து புறப்பட்டகுதிரை வாகனம் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு சென்று இரவு 9மணிக்கு சாமிதோப்பு தலைமைப் பதியைவந்தடைந்தது. இரவு வடக்கு வாசலில் அய்யாவை குண்ட சாமியின் தவக்கோலகாட்சி நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு அனுமன் வாகனபவனியும், நாளை இந்திர வாகனத்தில் பவனியும் நடக்கிறது. 30ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை, பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பங்குனி ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar