Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி கோயிலில் மழை வேண்டி ... செல்லியம்மன் கோவில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் செல்லும் வழி ஆக்கிரமிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 செப்
2012
10:09

திருத்தணி: மலைக் கோவிலுக்கு செல்லும் மலை பாதை படிகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளதால், அந்த வழியாக செல்லும் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சரவணப்பொய்கையில் புனித நீராடிய பின், படிகள் வழியாக நடந்து செல்வர். பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக, ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும், குளத்தைச் சுற்றி, மலை படியின் இரு புறமும் திருமண மண்டபம், விடுதிகள் கட்டியுள்ளனர். இவற் றை சிலர் வாடகைக்கு விட்டுள்ளனர். சிலர், ஆக்கிரமித்து கடைகள் கட்டி வியாபாரம் செய்து வருகின்றனர். மலை படிகளின் இருபுறமும் தேங்காய், பழம், பொம்மை, பஞ்சாமிர்தம், பெட்டிக்கடை என, 150 கடைகள் உள்ளன. இவற்றில், 17 கடைகள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ளன.கீற்று கொட்டகைகள்சிலர் கடைகள் முன் கம்பிகளை பந்தல் போல் அமைத்து படிகளை ஆக்கிரமித்து கடையை விரிவுபடுத்தியுள்ளனர். இதனால், அலகு காவடி எடுத்து வரும் பக்தர்கள், நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். விழாக்காலங்களில் பக்தர்கள் படிகள் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பல கடைகள் கீற்று கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நேரங்களில், தீ விபத்து ஏற்பட்டால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும். தீ தடுப்பு கருவிகள் எதுவும் இங்கு பொருத்தப்படவில்லை. படிகளில் பிச்சைக்காரர்கள் உட்கார்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். ஆக்கிரமிப்பு கடைக்காரர்களை அகற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து, கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கவிதாவிடம் கேட்ட போது, ""கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் உடனடியாக அகற்றப்படும். நடவடிக்கை பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்தால், கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் ஒவ்வொரு விழாவின் போதும் படிகளில் சென்று ஆய்வு செய்து வருகிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar