பதிவு செய்த நாள்
02
பிப்
2023
08:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் முதல் ஜீயர் சுவாமிகளின் 568 வது திரு நட்சத்திர திருவிழா நடந்தது.
திருக்கோவிலூர், உலகளந்த பெருமாள் கோவிலில், முதலாவது பட்டம் ஜீயர் சுவாமிகளின் திருநட்சத்திர விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், நித்திய பூஜை, 8:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் புறப்பாடாகி ஜீயர் மடத்தில் எழுந்தருளினார். பெருமாள், ராமானுஜர், மணவாள மாமுனிகள், முதல் ஜியர்க்கு விசேஷ அலங்கார திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமைத்த தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா, 7:00 மணிக்கு ஜீயர் மடத்தில் எழுந்தருளி நான்காயிர திவ்ய பிரபந்த சாற்றுமரை, பிரசாதம் விநியோகம், 9:00 மணிக்கு சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில் தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.