தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் திருநாவுக்கரசு சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், கோ பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.