வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2023 08:02
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.
இங்கு கடந்த 2006ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் அடுத்த கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி கடந்த 2021 நவம்பரில் துவங்கி நிறைவடைந்ததையடுத்து நேற்றுமுன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் இரவு சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பட்டு மின் அலங்கார ரதத்தில் நான்கு ரத வீதிகள் வழியே வலம் வந்தார். விழா ஏற்பாட்டினை திருப்பணி பொறுப்பாளர்களான என்.பத்மநாபன், என்.ஆர்.ஏ., முரளிராஜன், செயல் அலுவலர் கற்பக வெண்ணிலா செய்திருந்தனர்.