பதிவு செய்த நாள்
07
செப்
2012
10:09
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்களில், 151 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய, இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.கோவை வடக்கு மாவட்டத்தின் சார்பில், பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்களுக்குட்பட்ட, இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம், மேட்டுப்பாளையம் ரோடு, தொப்பம்பட்டி பிரிவில் உள்ள, வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடந்தது.வடக்கு மாவட்ட பொருளாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் செல்வம், ஒன்றியச் செயலாளர்கள் ஜெய்கார்த்தி, கோவிந்தன், தம்பிசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், விநாயகர் சதுர்த்தியின் பெருமைகள் குறித்தும், விழா நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். பெரியநாயக்கன்பாளையம் மற்றும் எஸ்.எஸ். குளம் ஒன்றியத்துக்குட்பட்ட 151 இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதிகாச ஆராய்ச்சியாளர் ரங்கராஜன் கலந்து கொள்ளும், விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டம், கவுண்டம்பாளையத்தில், வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது. வெள்ளக்கிணர் குளத்தில், விநாயகர் சிலையை கரைக்க, போதுமான தண்ணீர் விட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குணா நன்றி கூறினார்.