Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் ... பழநி தைப்பூச திருவிழா: குவியும் பாதயாத்திரை பக்தர்கள்.. நாளை தேரோட்டம் பழநி தைப்பூச திருவிழா: குவியும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்
எழுத்தின் அளவு:
திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2023
01:02

தஞ்சாவூர், திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

திருவாவடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்க கோவிலில் தைப்பூச பெருவிழா கடந்த ஜன.26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து தினமும் யானை, சிம்மம், பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 30ம் தேதி சகோபுரம் வெள்ளி ரிஷப வாகனக் காட்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(03ம் தேதி) நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு, சுமார் 500 டன் எடையுள்ள பிரம்மாண்ட தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் மகாலிங்க சுவாமி தேரில் எழுந்தருளினார். 9:00 மணிக்குமேல், விநாயகர், சுப்பிரமணியர், மகாலிங்க சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் சுவாமி என ஐந்து தேரோட்டம் வீதியுலா நடந்தது. சிறப்பு பூஜைகளுடன் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் விளங்கிட, ஓதுவா மூர்த்திகள் தேவார திருவாசக பதிகங்களுடன், சிவ வாத்தியங்கள் இசைத்திட இடை மருதா., மகாலிங்கா., என்ற கோஷத்துடன்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். நாளை (4ம் தேதி )பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் காவிரிக்கு எழுந்தருளி மதியம் 12:00க்கு மேல் 1:30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி எழுந்தருளி வெள்ளிரத காட்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar