Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி ... மருதமலையில் தைப்பூச தேர் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் மருதமலையில் தைப்பூச தேர் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி தைப்பூச திருவிழா: குவியும் பாதயாத்திரை பக்தர்கள்.. நாளை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பழநி தைப்பூச திருவிழா: குவியும் பாதயாத்திரை பக்தர்கள்.. நாளை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2023
01:02

பழநி: பழநி தைப்பூச திருவிழா நாளை நடக்க உள்ளது. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா ஜன.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தந்த பல்லாக்கில் வீதியுலா நடக்கிறது. நேற்று வெள்ளி யானையில் சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவின் ஆறாம் நாளான இன்று காலை 9:00 மணிக்கு தந்த பல்லாக்கில் ரத வீதி உலா, இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. தைப்பூசத்தையொட்டி நாளை காலை தோளுக்கினியானில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சண்முக நதிக்கு எழுந்தருள தீர்த்தம் கொடுத்தல் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் ,பிப்.7 ல் இரவு 7:00 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது.

குவிந்தனர்: இதை தொடர்ந்து பழநிக்கு வெளி மாவட்ட பக்தர்கள் அதிகமாக வந்துகுவிந்தபடி உள்ளனர். அலகு குத்தி, காவடி, தீர்த்த குடம் எடுத்து வருவோர் முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்னதானம், சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு வலி நிவாரண உதவி வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிப்பறைகள், குளியல் அறைகள், பக்தர்கள் தங்க இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் இருந்து பாரம்பரியமாக தைப்பூசத்திற்கு காவடி எடுத்து வரும் குழுவினர் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் இருந்து பழநி நோக்கி வந்தனர். ராமேஸ்வரம் மாற்றுத்திறனாளி பக்தர் பழனி, மூன்று சக்கர சைக்கிள் வாகனத்தில் ஒன்பது நாட்களாக பயணம் செய்து பழநி வந்தார். அவர் கூறுகையில்,"பழநி முருகனை ஆண்டுதோறும் வந்து வணங்கி செல்கிறேன். என் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை உள்ளது," என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar