Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலையில் தைப்பூச தேர் திருவிழா ... கோத்தகிரியில் இருந்து பழநி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை கோத்தகிரியில் இருந்து பழநி முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் தெப்போற்சவ ஏற்பாடு தீவிரம்
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் தெப்போற்சவ ஏற்பாடு தீவிரம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2023
03:02

திருவொற்றியூர், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. தைப்பூச திருவிழாவில், உற்சவர் சந்திரசேகரர் - திரிபுர சுந்தரி தாயார், ஆதிஷேச குளத்தின் தெப்பத்தில் எழுந்தருளி, நீராழி மண்டபத்தை சுற்றி வருவர். கடந்த, 2015ல் கொட்டித்தீர்த்த கன மழையால் ஆதிஷேச குளம் பாதி நிரம்பி, தெப்போற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. அதன் பின் குளம் நிரம்பவில்லை. இதனால், கோவிலுக்குள் இருக்கும் பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்ப திருவிழாவை, கோவில் நிர்வாகம் நடத்தியது. பக்தர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளை அடுத்து, கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நடவடிக்கையால், குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் பாதை அமைக்கப்பட்டது.

இந்நடவடிக்கையால், இந்தாண்டு பெய்த மழை நீர், குளத்திற்கு எளிதாக வந்து சேர்ந்தது. 2.50 ஏக்கர் பரப்புடைய ஆதிஷேச தீர்த்த குளத்தில், 6 - 7 அடி உயரத்திற்கு மழை நீர் சேகரமாகி உள்ளது. இதனால், தெப்போற்சவ நிகழ்வை இம்முறை வெகு விமரிசையாக நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, குளத்தின் படிக்கட்டுகள் சுத்தம் செய்யப்பட்டு, தெப்பம் தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 20 அடி அகலம், 20 அடி நீளம் என்ற அளவில், தெப்பம் அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு தைப்பூசத்தையொட்டி, வரும் 6ம் தேதி மாலை 6:30 மணிக்கு, சந்திரசேகரர் - திரிபுர சுந்தரி தாயார், தெப்பத்தில் எழுந்தருளி, நீராழி மண்டபத்தை வலம் வரவுள்ளனர். ஏழு ஆண்டுகளுக்குப் பின், சந்திரசேகரர், தெப்பத்தில் எழுந்தருளி, நீராழி மண்டபத்தை வலம் வரும் நிகழ்வை காண, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை, அறநிலைய துறை உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையிலான கோவில் ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் 2 மணி நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar