மானகிரி சபரிநகரில் பஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. இங்கு கருட முகம், சிம்ம முகம், வராஹ முகம், ஹயக்ரீவர் முகம், வாநர முகம் ஆகிய ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார்.இக்கோயிலின் வருடாபிேஷகத்தை முன்னிட்டு பிப்.,10 காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி பஞ்சமூக பூமந்திர ேஹாமம் நடைபெறும். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு பூர்ணாகுதியாகி கடம் புறப்பட்டு சுவாமிக்கு அபிேஷக, ஆராதனைகள் நடைபெறும். மாலை சந்தனக்காப்பில் சுவாமி அருள்பாலிப்பார். தொடர்ந்து சீதா ராம கல்யாண உத்ஸவம், ஸகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும். மறுநாள் காலை 8:00 மணி முதல் லட்சார்ச்சனை நடைபெறும்.