Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... காளஹஸ்தி பக்த கண்ணப்பர் கோயில் கொடி மரத்திற்கு பஞ்சலோக கவசம் காளஹஸ்தி பக்த கண்ணப்பர் கோயில் கொடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

03 பிப்
2023
10:02

மயிலாடுதுறை: சீர்காழி அருகே 100  ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் பழமைவாய்ந்த  தர்மராஜா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இன்று தீமிதி திருவிழா  நடைபெற்றது. தீமிதி திருவிழாவை  முன்னிட்டு கடந்த 25 ம் தேதி கொடி ஏற்றப்பட்டு  தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்  அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் நாள் தீமிதி உற்சவ திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு தர்மராஜா மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீக்குழி முன்பு எழுந்தருளினார்.  இதனை தொடர்ந்து  மாலை புரவாய்க்காலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் மற்றும் அலகு காவடிகள் மேல தாலங்கள் முழங்க  வருகை புரிந்து  கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட தீ குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுருந்தனர். முன்னதாக இன்று  காலை அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் இருந்து திரளான பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பால்குடம், அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar